

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே பத்வா கேதா கிராமத்தைச் சேர்ந்த 29 பேர் வேனில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு நேற்று இரவு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது கிராமத்தின் அருகே உள்ள இந்திரா கால்வாயில் உள்ள பாலத்தில் வேன் சென்று கொண்டிருந்தது. திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கால்வாயிக்குள் கவிழ்ந்தது.
இதையறிந்த கிராம மக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினரும் கால்வாயில் இறங்கி தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்டனர். இதில் 22 பேரை மீட்டனர்.