ஈரோட்டில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

ஈரோட்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை கைது செய்தனர்.
கைது
கைது
Published on

ஈரோடு:

ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லதுரை மற்றும் போலீசார் செங்குட்டுவன் வீதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி 2 பேர் நின்றிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். 

விசாரணையில் அவர்கள், தொப்பையர் வீதியை சேர்ந்த முகமது மீரான் (வயது 38), செங்குட்டுவன் வீதியை சேர்ந்த மோகனா (36) ஆகியோர் என்பதும், அவர்கள் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com