அனுமதியின்றி மண் கடத்தி வந்த லாரி டிரைவர் கைது

இண்டூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மண் கடத்தி வந்த லாரி டிரைவரை கைது செய்தனர்.
அனுமதியின்றி மண் கடத்தி வந்த லாரி டிரைவர் கைது
Published on

இண்டூர்:

தர்மபுரி மாவட்டம், இண்டூர் பகுதியில் அனுமதியின்றி செம்மண் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் போலீசார் தருமபுரி-பென்னாகரம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக அனுமதியின்றி டிப்பர் லாரியில் செம்மண் கடத்தி வந்த டிரைவர் முருகன் (வயது 39), லாரியின் உரிமையாளர் முனுசாமி ஆகிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்து முருகனை கைது செய்தனர். தலைமறைவாகி உள்ள முனுசாமியை போலீசார் தேடி வருகிறார்கள். பின்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.      

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com