மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர் பலி

படப்பை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து (கோப்புப்படம்)
விபத்து (கோப்புப்படம்)
Published on

படப்பை:

படப்பை அடுத்த நடுவீரப்பட்டு குறிஞ்சி தெரு எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (26).

இவர் தாம்பரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று தனது மோட்டார் சைக்கிளில் தாம்பரத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

வரதராஜபுரம் ராயப்பன் நகர் அருகே 400அடி பைபாஸ் சாலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது தாம்பரம் நோக்கி சென்ற லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சதீஷ் நிலை தடுமாறி விழுந்தார். லாரியின் சக்கரம் ஏறி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுகுறித்து சோமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்திரராஜன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com