பூரி ஜெகன்நாதர் ஆலயத்தின் கருவூலம் 34 ஆண்டுகளுக்கு பிறகு நாளை திறப்பு

இந்து மக்களின் மிகவும் புனிதமிக்க நான்கு வழிபாட்டு தலங்களில் ஒன்றாக விளங்கும் பூரி ஜெகன்நாதர் ஆலயத்தின் கருவூல அறை 34 ஆண்டுகளுக்கு பிறகு நாளை திறக்கப்படுகிறது.
பூரி ஜெகன்நாதர் ஆலயத்தின் கருவூலம் 34 ஆண்டுகளுக்கு பிறகு நாளை திறப்பு
Published on

உலக அளவில் புகழ் பெற்ற 12-ம் நூற்றாண்டை சேர்ந்த ஜெகன்நாதர் கோவில், ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி நகரில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கருவூல அறையில் ஜெகன்நாதருக்கு அலங்காரம் செய்யும் ஆபரணங்கள் மற்றும் பக்தர்கள் செலுத்திய தங்க, வைர நகைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த கருவூலம் 1905, 1926, 1978 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் திறக்கப்பட்டு அதில் உள்ள பொருட்கள் கணக்கு பார்க்கப்பட்டு பட்டியலிடப்பட்டது.

இந்நிலையில், ‘ரத்னா பந்தர்’ என்றழைக்கப்படும் பத்து பகுதிகளை கொண்ட இந்த கருவூல அறையின் சுவர், கூரை, தரை ஆகியவற்றின் உறுதி மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக 34 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மீண்டும் திறக்கப்பட்டுகிறது.

நேபாள மன்னர் கஜபதி மஹாராஜ் டிப்யசிங்கா டெப் அல்லது அவரது பிரதிநிதி, தொல்லியல் துறையை சேர்ந்த இரு பொறியாளர்கள், ஒடிசா ஐகோர்ட்டால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர் மற்றும் கோவில் அறங்காவல் துறை தலைமை நிர்வாகிகளை உள்ளடக்கிய பத்துபேர் கொண்ட குழுவினர் இந்த ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com