அநியாயமாக எங்கள் மகளை கொன்று விட்டார்கள் - மாணவியின் பெற்றோர் கண்ணீர்

எனது மகளை அனாவசியமாக தள்ளிவிட்டு அநியாயமாக கொன்று விட்டனர் என்று மாணவி லோகேஸ்வரியின் பெற்றோர் கூறினர்.
மாணவியின் பெற்றோர் நல்லா கவுண்டர் - சிவகாமி.
மாணவியின் பெற்றோர் நல்லா கவுண்டர் - சிவகாமி.
Published on

கோவை:

மாடியில் இருந்து தள்ளி விட்டு இறந்த மாணவி லோகேஸ்வரி உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது. இன்று பிரேத பரிசோதனை நடைபெற்றது. மாணவியின் உடலை பார்த்து கதறி அழுத அவரது தந்தை நல்லா கவுண்டர் கூறியதாவது-

நேற்று காலை எனது மகள் வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பேரிடர் மேலாண்மை பயிற்சி இருப்பதாக எதுவும் சொல்லவில்லை.

எனது மகள் தவறி கீழே விழுந்த சம்பவம் மதியம் 3 மணிக்கு நடைபெற்று உள்ளது. ஆனால் மாலை 5 மணி வரை கல்லூரி நிர்வாகம் சார்பில் எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

வேறு நபர் மூலம் தான் இதனை நான் தெரிந்து கொண்டேன். எனது மகளை அனாவசியமாக தள்ளிவிட்டு அநியாயமாக கொன்று விட்டனர்.

இது தொடர்பாக பயிற்சியாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆலாந்துறை போலீசில் புகார் தெரிவித்து உள்ளேன்.

இவ்வாறு கண்ணீர் மல்க கூறினார்.

நேற்று காலை எனது மகள் வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பேரிடர் மேலாண்மை பயிற்சி இருப்பதாக எதுவும் கூறவில்லை.

எனது மகள் இறந்த தகவல் சக மாணவி மூலம் தான் எங்களுக்கு தெரிய வந்தது.

அவள் அப்படி இறந்தாள்? இப்படி இறந்தாள் என தான் கல்லூரி நிர்வாகம் சார்பில் கூறினார்கள். எப்படி இறந்தாள் என யாரும் தெரிவிக்கவில்லை. வேறு ஒருவர் மூலம் தான் அவர் இறந்த தகவல் எங்களுக்கு கிடைத்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com