

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாட்னி என்ற கிராம மக்கள் தண்ணீருக்காக சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. அவர்கள் ஒரு குடம் தண்ணீருக்காக தினந்தோறும் இரண்டு கிலோ மீட்டர் நடந்து செல்கிறார்கள். அதன்பின் அங்குள்ள கிணற்றில் உள்ள தண்ணீரை எடுத்து கொண்டு வருகிறார்கள். தற்போது கடும் வெயில் அடிப்பதால் மிகவும் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.