

அரசூர்:
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கண்ணாரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் (வயது 50). இவர் 50-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆடுகளை, ஆட்டுப்பட்டியில் அடைத்து வைத்துள்ளார். அப்போது நள்ளிரவு திடீரென பெய்த மழையின்போது மின்னல் தாக்கியதில் 21 ஆடுகள் பரிதாபமாக செத்தன. 5 ஆடுகளின் கண் பார்வை பறிபோனது.
இந்த சம்பவம் தொடர்பாக கால்நடை மருத்துவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.