மகாராஷ்டிராவில் கூட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை: பத்திரிகையாளர் உள்பட 3 பேர் படுகாயம்

மகாரஷ்டிரா மாநிலம் நாசிக்கில் சிறுத்தை கூட்டத்திற்குள் புகுந்து தாக்கியதில் பத்திரிகையாளர்கள் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். #leopardattack
மகாராஷ்டிராவில் கூட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை: பத்திரிகையாளர் உள்பட 3 பேர் படுகாயம்
Published on

நாசிக்:

மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் அடர்ந்த காடுகள் உள்ளன. இக்காடுகளில் சிறுத்தை, ஓநாய், கழுதைப் புலி மற்றும் நரி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சிறுத்தை போன்ற மிருகங்கள் அருகில் உள்ள ஊருக்குள் அடிக்கடி மக்களை அச்சுறுத்தி வரும்.

இந்நிலையில் இன்று காலை பொதுமக்கள் வசிக்கும் இடமான சவர்கார் அருகே சிறுத்தை ஒன்று நடமாடியது. இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் காட்சியை பார்ப்பதற்கு அப்பகுதியில் பொதுமக்கள் அதிக அளவில் கூடினர். வீடியோ எடுப்பதற்காக செய்தி சேனல்களும் அங்கு வந்தன.

கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த கெய்க்வாட் என்பவரும், இரண்டு பத்திரிகையாளர்கள் வீடியோ எடுப்பதற்கும் முயற்சி செய்தனர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்திற்குள் சிறுத்தை பொதுமக்களை நோக்கி பாய்ந்தது. இதில் மேற்கொண்ட மூன்று பேரும் காயமடைந்தனர்.

பின்னர் வனத்துறையினர் சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேல் போராடி சிறுத்தையை பிடித்தனர். பிடிபட்ட சிறுத்தை அருகில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் கொண்டு விடப்பட்டது. #leopardattack

X

Maalai Malar
www.maalaimalar.com