ரவுடி ஸ்ரீதர் உடலை நாளை காஞ்சீபுரம் கொண்டுவர ஏற்பாடு: வக்கீல் தகவல்

கம்போடியாவில் தற்கொலை செய்த ரவுடி ஸ்ரீதர் உடலை நாளை காஞ்சீபுரம் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வக்கீல் மலையூர் புருசோத்தமன் கூறினார்.
ரவுடி ஸ்ரீதர் உடலை நாளை காஞ்சீபுரம் கொண்டுவர ஏற்பாடு: வக்கீல் தகவல்
Published on

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர். தலைமறைவாக இருந்த அவர் கம்போடியா நாட்டில் உள்ள ஓட்டலில் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீதர் உடலை இந்தியா கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது மகள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

இந்த நிலையில் கம்போடியாவில் உள்ள ஸ்ரீதரின் வக்கீல் மலையூர் புருசோத்தமனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

ஸ்ரீதர் உடலை கொண்டு வர இந்திய தூதரக அதிகாரிகள் அனைத்து ஒத்துழைப்பும் அளிக்கின்றனர். நேற்று ஸ்ரீதர் குறித்த ஆவணங்களை கம்போடியா அரசிடம் வழங்கினோம். அவர்கள் மேலும் சில ஆவணங்களை கேட்டு உள்ளனர். இன்று ஸ்ரீதர் பற்றிய கூடுதல் ஆவணங்கள் கொடுக்கப்படும். இதனை ஏற்கும்பட்சத்தில் ஸ்ரீதர் உடலை நாளை காஞ்சீபுரம் கொண்டு வருவோம்” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com