நாமக்கல்லில் சலவை தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

நாமக்கல்லில் நேற்று நகர சலவை தொழிலாளர்கள் மத்திய சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்லில் சலவை தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
Published on

நாமக்கல்:

நாமக்கல் பூங்கா சாலையில் நகர சலவை தொழிலாளர்கள் மத்திய சங்கத்தினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். பொருளாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.

இதில் மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சலவை தொழிலாளர்களுக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் இலவச சலவை பெட்டி, தையல் எந்திரம், நடமாடும் சலவையகம் மற்றும் சலவை நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடன் வழங்கிட மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளில் சலவைத்தொழிலாளர் சமூகத்தை சேர்ந்தவர்களை நியமன உறுப்பினர்களாக நியமனம் செய்ய வேண்டும். சட்டசபை தேர்தலில் தனித்தொகுதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் நாமக்கல் நகர சலவை தொழிலாளர்கள் மத்திய சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலாளர் சந்திரன் நன்றி கூறினார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியத்தை சந்தித்து சங்கத்தின் நிர்வாகிகள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com