நில மோசடி வழக்கில் இருந்து குமாரசாமி விடுவிப்பு

நில முறைகேடு தொடர்பான வழக்கில் கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. #Kumaraswamy #LandCheating
நில மோசடி வழக்கில் இருந்து குமாரசாமி விடுவிப்பு
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே தனிசந்தரா என்ற இடத்தில் பெங்களூரு வளர்ச்சி குழுமம் சார்பில் வீட்டு மனை உருவாக்கப்பட்டது.

இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. பின்னர் 2007-ம் ஆண்டு அதில் 3.9 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டது. அப்போது குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தார்.

இதில், தனி நபருக்கு சாதகமாக அரசு முடிவு எடுத்திருப்பதாக புகார் கூறப்பட்டது. குமாரசாமி மற்றும் சில அதிகாரிகள், முன்னாள் மந்திரி ஆகியோர் இதில் முறைகேடு செய்திருப்பதாகவும் புகார்கள் வந்தன.

இது சம்பந்தமாக மகா தேவசாமி என்பவர் 2011-ம் ஆண்டு லோக் அயுக்தா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீண்ட காலமாக நடந்து வந்தது.

இதில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று குமாரசாமி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதை விசாரித்த நீதிபதி பி.வி.பட்டேல், முதல்-மந்திரி குமாரசாமி, அப்போதைய மந்திரி சென்னிகப்பா, ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜோதி ராமலிங்கம் உள்ளிட்டோரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கு 4 ஆண்டுகள் கழித்து தாமதமாக தொடரப்பட்டுள்ளது. மேலும் குமாரசாமி உள்ளிட்டோர் முறைகேடு செய்தார்கள் என்பதற்கான எந்த ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை. விதி முறைகளை மீறியதற்கான ஆவணங்களும் தாக்கல் ஆகவில்லை.

எனவே, அவர்களை வழக்கில் இருந்து விடுவிக்கிறேன் என்று நீதிபதி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com