லாலுவின் உடல்நிலை மோசமடைந்தது- தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

மருத்துவ காரணங்களுக்காக சிறப்பு ஜாமீன் பெற்றுள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #laluprasadyadav #admittedinICU
லாலுவின் உடல்நிலை மோசமடைந்தது- தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
Published on

பாட்னா:

பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவ் முதல்வராக பதவி வகித்தபோது, கால்நடை தீவனம் வாங்குவதில் ஊழல் செய்த குற்றத்துக்காக 3 வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் இருந்தார். சமீபத்தில் மருத்துவ காரணங்களுக்காக 6 வார கால ஜாமீன் கோரியிருந்த லாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில், உடல் நிலை மோசமடைந்த காரணத்தினால், பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் லாலு பிரசாத் யாதவ் அனுமதிக்கப்பட்டுள்ளார். #laluprasadyadav #admittedinICU

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com