வீடு இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி - குமாரசாமி நிதியுதவி வழங்கினார்

கர்நாடகாவில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியாகினர். விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை சந்தித்த முதல் மந்திரி குமாரசாமி இன்று நிதியுதவி வழங்கினார்.
வீடு இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி - குமாரசாமி நிதியுதவி வழங்கினார்
Published on

பெங்களூர்:

கர்நாடக மாநிலம் பிடார் மாவட்டத்தில் உள்ள பசவகல்யாணா தாலுகா உள்ளது. நேற்று அப்பகுதியில் உள்ள வீடு திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்நிலையில், கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி பசவ கல்யாணா தாலுகாவுக்கு இன்று சென்றார். அவர் விபத்தில் பலியானோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, நிதியுதவியாக 24 லட்சம் ரூபாய்க்கான காசோலையை குடும்ப தலைவரிடம் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com