ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய அமைச்சர் சந்திக்க மறுத்தது ஏற்புடையதல்ல- கிருஷ்ணசாமி

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்க முடியவில்லை அல்லது சந்திக்க மறுத்தது ஏற்புடையதல்ல என்று கிருஷ்ணசாமி கூறினார். #Krishnasamy #OPS
ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய அமைச்சர் சந்திக்க மறுத்தது ஏற்புடையதல்ல- கிருஷ்ணசாமி
Published on

தூத்துக்குடி வடக்கு மாவட்ட புதிய தமிழகம் இளைஞரணி பொறுப்பாளர் ராஜசேகர் விபத்தில் காயமடைந்து கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விளாத்திகுளம், ஓட்டப்பிடாரத்தில் ஏழைகளுக்கு ஒதுக்கிய நிலங்களை முறைகேடாக விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்க முடியவில்லை அல்லது சந்திக்க மறுத்தது வருந்தத்தக்க வி‌ஷயம். அதுவும் அனுமதி அளித்து விட்டு பார்க்க மறுத்திருந்தால் ஏற்கத்தல்ல. தமிழக மக்களின் பிரநிதிகளை மத்திய அரசின் அமைச்சர்கள் அப்படி செய்திருக்கக்கூடாது. செய்திருந்தால் ஏற்புடையதல்ல.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com