கொடுங்கையூர் குப்பைமேடு அகற்றப்படும் - டாக்டர் கலாநிதி வீராசாமி உறுதி

கொடுங்கையூர் குப்பைமேடு அகற்றப்படும் என்று டாக்டர் கலாநிதி வீராசாமி உறுதி அளித்துள்ளார். #LokSabhaElections2019 #DMK
கொடுங்கையூர் குப்பைமேடு அகற்றப்படும் - டாக்டர் கலாநிதி வீராசாமி உறுதி
Published on

சென்னை:

வடசென்னை பாராளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி வாக்காளர்களை சந்தித்த போது உதயசூரியன் சின்னத்தில் தனக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் கூறியதாவது:-

நான் வெற்றி பெற்றதும் கழக தலைவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்றும் உறுதி கூறினார். குறிப்பாக வடசென்னை பகுதியில் உள்ள கொடுங்கையூர் குப்பை மேட்டை அகற்றி மக்களின் சுகாதாரம் பாதுகாக்கப்படும், பெரம்பூர் பகுதியில் உள்ள சாலைகள் சீரமைக்கப்படும். விரிவாக்கப்பகுதிகளில் பாதாளச்சாக்கடைத் திட்டம் அமல்படுத்தப்படும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர் கலாநிதி வீராசாமி சென்ற இடங்களில் எல்லாம் பொதுமக்கள் அவரை உற்சாகத்துடன் வரவேற்று எங்கள் வாக்கு உதயசூரியனுக்கே என்று உறுதிகூறினர். #LokSabhaElections2019 #DMK

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com