கொடிவேரி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

கொடிவேரி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

டிஎன்.பாளையம்:

பெரியகொடிவேரி தேம்பிலி காலனியை சேர்ந்த கூலி தொழிலாளி கிட்டான்(70) இவர் கடந்த சனிக்கிழமை இரவு 9மணியளவில் கிட்டான் டி.ஜி.புதூரில் இருந்து கொடிவேரி செல்லும் சாலையில் சுப்பிரமணி மளிகை கடையருகே நடந்து சென்று கொண்டு உள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த ஒட்டர்பாளையத்தை சேர்ந்த பரமேஸ் என்பவர் மொபட்டில் வந்து கொண்டிருந்த போது தடுமாறி முதியவர் கிட்டான் மீது மோதினார்.

இந்நிலையில் கை கால்கள் மற்றும் மார்பு தலை பகுதிகளில் காயம்பட்ட கிட்டானை 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்தோர் சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பிறகு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்ட சென்று சிகிச்சைக்கு பெற்று வந்த நிலையில், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கிட்டான் இறந்து விட்டார். அதனையடுத்து சத்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்று முடிந்து முதியவர் கிட்டான் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து பங்களாபுதூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com