கே.கே.நகர், சாலி கிராமம், வடபழனி பெண்களிடம் நகை பறிப்பு

சென்னையில் கே.கே.நகர், சாலி கிராமம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்ற பெண்களிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.கே.நகர், சாலி கிராமம், வடபழனி பெண்களிடம் நகை பறிப்பு
Published on

போரூர்:

கே.கே நகர் பிருந்தாவனம் குடியிருப்பில் வசித்த சந்திரா (வயது67). இன்று காலை 7 மணி அளவில் மருமகளுடன் வீட்டிற்கு அருகே உள்ள ராஜமன்னார் சாலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் சந்திரா அணிந்திருந்த 6 சவரன் தாலி செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலிகிராமம் சாந்தி காலனியை சேர்ந்தவர் மேகலை (வயது65). அவர் தினமும் காலையில் அருணாச்சலம் சாலையில் உள்ள குபேர சாய் பாபா ஆலயத்திற்கு வந்து செல்வது வழக்கம்.

இன்று காலை 7 மணி அளவில் மேகலை கோவில் அருகே நடந்து வரும் போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் மேகலை அணிந்திருந்த 6 சவரன் செயினை பறித்து சென்றனர்.

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்த ராணி (வயது46). இன்று காலை நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் அவரிடம் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து சென்றனர்.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த 3 செயின் பறிப்பு சம்பவம் அப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com