கீழ்வேளூர் அருகே சாராயம் கடத்திய 4 பேர் கைது

கீழ்வேளூர் அருகே சாராயம் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

சிக்கல்:

கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் ஆழியூர்-பெருங்கடம்பனூர் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பெருங்கடம்பனூர் கடைத்தெருவில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பெருங்கடம்பனூரை சேர்ந்த செல்லமுத்து (வயது22), தினேஷ் (23) ஆகியோர் என்பதும், மோட்டார்சைக்கிளில் 110 லிட்டர் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதேபோல் பெருங்கடம்பனூர் ஐ.டி.ஐ. அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் பெருங்கடம்பனூரை சேர்ந்த கலையரசன் (45) என்பதும், 110 லிட்டர் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

ஆழியூர் பிரிவு சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பழையனூர் மேல்பாதியை சேர்ந்த ஜெயராமன் (45) என்பதும், 110 லிட்டர் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த 330 லிட்டர் சாராயம் மற்றும் 3 மோட்டார்சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com