

நெல்லை:
வள்ளியூர் அருகே உள்ள திருமலாபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மகள் பொன்சில்வியா (வயது 16). இவர் வள்ளியூரில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 9-ந்தேதி பள்ளிகூடம் சென்ற மாணவி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை வள்ளியூர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை யாரேனும் கடத்தி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.