வள்ளியூரில் பிளஸ்-2 மாணவி திடீர் மாயம்

வள்ளியூரில் பள்ளிகூடம் சென்ற பிளஸ்-2 மாணவி வீடு திரும்பாதது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
மாயம்
மாயம்
Published on

நெல்லை:

வள்ளியூர் அருகே உள்ள திருமலாபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மகள் பொன்சில்வியா (வயது 16). இவர் வள்ளியூரில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 9-ந்தேதி பள்ளிகூடம் சென்ற மாணவி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். 

போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை யாரேனும் கடத்தி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com