பழங்குடியின சிறுமி பாலியல் பலாத்காரம் - வயநாடு மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் தலைமறைவு

கேரள மாநிலத்தில் 15 வயது பழங்குடியின சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வயநாடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஓ.என். ஜார்ஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். #KerelaCongressleader #ONGeorge #POCSO
பழங்குடியின சிறுமி பாலியல் பலாத்காரம் - வயநாடு மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் தலைமறைவு
Published on

கேரள மாநிலம், வயநாடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரான ஓ.என்.ஜார்ஜ் சுல்தான் பத்தேரி பஞ்சாயத்து முன்னாள் தலைவராக பதவி வகித்தார்.

இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக சுல்தான் பத்தேரி பகுதிக்குட்பட்ட 15 வயது பழங்குடியின சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இதை ஏற்றுக்கொள்ளாத சிறுமியின் பெற்றோர் ஜார்ஜ் மீது போலீசில் புகார் அளித்தனர். சிறார் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக இருக்கும் ஜார்ஜை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com