ஓணம் பண்டிகை: கூடுதல் விமானங்கள்-ரெயில்கள் இயக்க கேரள அரசு வேண்டுகோள்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் கேரள மாநிலத்திற்கு கூடுதலாக விமானங்கள் மற்றும் ரெயில்களை இயக்கும்படி கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மலையாள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி அசோக் கஜபதி ராஜுவுக்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.