சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் - சீராய்வு மனு தாக்கலுக்கு கேரள அரசு ஆதரவு

சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து தேவசம் போர்டு சீராய்வு மனு தாக்கல் செய்தால் அதை அரசு எதிர்க்காது என கேரள மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். #SabarimalaVerdict
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் - சீராய்வு மனு தாக்கலுக்கு கேரள அரசு ஆதரவு
Published on

சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து தேவசம் போர்டு சீராய்வு மனு தாக்கல் செய்தால் அதை அரசு எதிர்க்காது என கேரள மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்ததும் அதை வரவேற்பதாக கேரள மாநில அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் கூறியது.

கோர்ட்டு தீர்ப்பை ஏற்று பெண்கள் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்யப் போவதாக தெரிவித்தன. நாளை மறுநாள் (புதன் கிழமை) இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது வருகிற 18-ந்தேதி முதல் பெண்களை அனுமதிப்பது பற்றிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் சபரி மலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் மூன்று நாட்களுக்குள் தனது முடிவை கேரள மாநில அரசு மாற்றியுள்ளது. இதற்கு முன்பு கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த கேரள மாநில அரசு தீவிரம் காட்டியது. தற்போது அரசு அதிகாரிகள் அதில் வேகத்தை குறைத்து பல்டி அடித்துள்ளனர்.

பெண்களை சபரி மலைக்கு வர அனுமதிக்கக் கூடாது என்று பந்தள ராஜ குடும்பத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தேவசம்போர்ட்டை ராஜ குடும்பத்தினர் வலியுறுத்தியபடி உள்ளனர்.

இதைத் தொடர்ந்து மறு சீராய்வு மனு செய்ய தேவசம் போர்டு ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில் மறுசீராய்வு மனுவை ஆதரித்து கேரள மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

இவ்வாறு மந்திரி சுரேந்திரன் கூறியுள்ளார்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு கேரள மாநில காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ‘‘தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறியுள்ளார்.

இதன் மூலம் கேரள மாநில அரசியல் கட்சிகள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. எனவே சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் சிக்கல்கள் உருவாகத் தொடங்கி உள்ளன.

இதற்கிடையே சபரி மலைக்கு குடும்ப பெண்கள், உண்மையான பெண் பக்தர்கள் வர மாட்டார்கள். பெண்ணியவாதிகள் மட்டுமே வந்து செல்வார்கள் என்று தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com