கேரளா கன்னியாஸ்திரி விவகாரம் - பாதிரியார் பிராங்கோ முல்லக்கலின் ஜாமின் மனு நிராகரிப்பு

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாதிரியார் பிராங்கோ முல்லக்கலின் ஜாமின் மனுவை கேரள ஐகோர்ட் நிராகரித்தது. #FrancoMulakkal #Kerala
கேரளா கன்னியாஸ்திரி விவகாரம் - பாதிரியார் பிராங்கோ முல்லக்கலின் ஜாமின் மனு நிராகரிப்பு
Published on

கொச்சி:

கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தர் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். 

இது தொடர்பாக அந்த கன்னியாஸ்திரி போலீசிலும் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இது தொடர்பாக வாடிகனில் உள்ள போப் ஆண்டவரின் அலுவலகத்திற்கு புகார் கடிதமும் அவர் எழுதினார். இதனை தொடர்ந்து பிஷப் செப்டம்பர் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

கன்னியாஸ்திரி கேட்டுக் கொண்டதற்கு இணங்க பிஷப் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக முல்லக்கல் விடுவிக்கப்பட்டார்.  தற்போது, விசாரணைக்காவலில் உள்ள அவர் ஜாமின் கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை இன்று நீதிமன்றம் நிராகரித்தது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com