கேரள வெள்ள நிவாரணத்திற்கு ஒரு ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கும் சகோதரர்கள்

கேரளாவை சேர்ந்த சகோதரர்கள் தங்களது ஒரு ஏக்கர் நிலத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளனர். #KeralaFlood #Teenage #OfferLand
கேரள வெள்ள நிவாரணத்திற்கு ஒரு ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கும் சகோதரர்கள்
Published on

கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவி வழங்கி வருகிறார்கள். பலர் பொருட்களாகவும், பணமாகவும் தங்களது ஆதரவுக்கரத்தை நீட்டி வருகிறார்கள்.

கேரளாவை சேர்ந்த சகோதரர்கள் தங்களது ஒரு ஏக்கர் நிலத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளனர்.

வடக்கு கன்னூர் மாவட்டம் பையனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவர் சுவாகாவும், அவரது தம்பியும் சேர்ந்து கேரள முதல்-மந்திரியின் வெள்ள நிவாரண நிதிக்கு தங்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளனர். இதுதொடர்பாக பள்ளி முதல்வர் மூலமாக அவர்கள் அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். இதற்கு சகோதரர்களின் தந்தையும் சம்மதம் தெரிவித்து உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com