கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் - புதுவை பா.ஜனதா சேகரித்து வழங்கியது

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை புதுவை பா.ஜனதா சேகரித்து வழங்கியது.
கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் - புதுவை பா.ஜனதா சேகரித்து வழங்கியது
Published on

புதுச்சேரி:

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுவை பா.ஜனதா கட்சியின் தூய்மை இந்தியா குழு மற்றும் பேரிடர் மேலாண்மை குழு இணைந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இருந்து பொருட்களை சேகரித்து செல்கின்றனர்.

இக்குழுவின் தலைவராக அகிலன் மற்றும் சோழராஜன் செயல்பட்டு ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனத்தை புதுவை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., கொடி அசைத்து வழி அனுப்பினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் தங்க. விக்ரமன், ரவிச்சந்திரன், சங்கர், துணை தலைவர் செல்வம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் இக்குழுவினருடன் நாகேஸ்வரன், வடிவேல், கணபதி, வேலு, ஸ்ரீநிவாசன், திரிபுரசுந்தரி, கவிதா, ரமேஷ், ஜான் கென்னடி, கர்ணன், சிவ செந்தில், பாலபாஸ்கர், குமார், கலையரசன், வேணுகணேஷ், ஆனந்த பாஸ்கர் மற்றும் பலரும் கேரளா சென்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com