கேரள முதல் மந்திரி நிவாரண நிதியாக 2.53 லட்சம் மக்களுக்கு ரூ.416 கோடி ஒதுக்கீடு

கேரள முதல் மந்திரியாக பினராயி விஜயன் பொறுப்பேற்ற பிறகு 2.53 லட்சம் மக்களுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.416 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. #KeralaCMsrelieffund
கேரள முதல் மந்திரி நிவாரண நிதியாக 2.53 லட்சம் மக்களுக்கு ரூ.416 கோடி ஒதுக்கீடு
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநில சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து அம்மாநில முதல் மந்திரியாக பினராயி விஜயன் கடந்த 25-5-2016 அன்று பதவியேற்றார்.

அவரது பதவியேற்புக்கு பின்னர் கேரள மாநிலத்தில் நிகழ்ந்த விபத்துகள், மழை, வெள்ளம், தீ உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்கள் மற்றும் சிறப்பு சிகிச்சைகளிக்கான நிதியுதவி கோரும் நோயாளிகளிக்கு மாவட்ட கலெக்டர்கள் மூலமாக அரசின் சார்பில் அளிக்கப்படும் முதல் மந்திரி நிவாரண நிதியின் தொகை 3 லட்சமாக உயர்த்தப்பட்டது.

மேலும், இந்த தொகை பாதிக்கப்பட்டவர்கள் அல்லது இறந்தவர்களின் வாரிசுகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

பினராயி விஜயன் தலைமையிலான இந்த ஆட்சிக் காலத்தின் முதல் இரண்டாண்டுகளில் இதுவரை 2.53 லட்சம் மக்களுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.416 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல் மந்திரியின் அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #KeralaCMsrelieffund 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com