கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு, அமெரிக்காவில் 17 நாட்கள் மருத்துவ சிகிச்சை

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வருகிற 19-ந் தேதி மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். அங்கு 17 நாட்கள் தங்கியிருந்து அவர் சிகிச்சை பெறுகிறார். #KeralaCM #PinarayiVijayan
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு, அமெரிக்காவில் 17 நாட்கள் மருத்துவ சிகிச்சை
Published on

திருவனந்தபுரம்:

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வருகிற 19-ந் தேதி மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். அங்குள்ள மினி சோட்டா ரோஸ்செஸ்டர் மயோ ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெறுகிறார். அங்கு 17 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுகிறார். சிகிச்சை முடிந்து வருகிற செப்டம்பர் மாதம் 6-ந் தேதி அவர் கேரளா திரும்புகிறார்.

அவருடன் அவரது மனைவி கமலாவும் செல்கிறார். பினராயி விஜயன் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வது தொடர்பான ஒப்புதல் கேட்டு மத்திய வெளியுறவுத்துறைக்கு அவரது பயணத்திட்டம் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்ததும் பினராயி விஜயன் அமெரிக்கா செல்கிறார்.

பினராயி விஜயனின் அமெரிக்க பயணத்தை அவரது தனி செயலாளர் ஜெயராஜா உறுதிப்படுத்தி உள்ளார்.

பினராயி விஜயன் அமெரிக்காவில் சிகிச்சை பெற உள்ள ஆஸ்பத்திரி புற்றுநோய் சிகிச்சைக்கு புகழ் பெற்றது ஆகும். இதற்கு முன்பு முன்னாள் சபாநாயகர் கார்த்திக்கேயன், நடிகை மம்தா மோகன்தாஸ் இந்த ஆஸ்பத்திரியில் புற்றுநோயுக்காக சிகிச்சை பெற்று உள்ளனர்.

பினராயி விஜயன் கடந்த மார்ச் மாதம் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் மருத்துவ சிகிச்சை பெற்றார். அப்போது அது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என்று அறிவிக்கப்பட்டது.

கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி 17 பேர் உயிரிழந்தனர். இந்த நோய் தாக்குதலை கட்டுப்படுத்த பினராயி விஜயன் தீவிர முயற்சி எடுத்தார். இதனை பாராட்டி அவருக்கு அமெரிக்காவில் பால்டிமோரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் கியூமன் வைராலஜி என்ற அமைப்பு அவரை கவுரவப்படுத்தி விருது வழங்கி இருந்தது. இதற்காக அவர் அமெரிக்கா சென்று இருந்தபோது அங்குள்ள ஆஸ்பத்திரியில் முதற்கட்டமாக மருத்துவ பரிசோதனை செய்திருந்தார். தற்போது 2-வது கட்டமாக அவர் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்கிறார். #KeralaCM #PinarayiVijayan

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com