சந்திரபாபு நாயுடுவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் சந்திப்பு

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆந்திரப்பிரதேசம் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை இன்று டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். #ArvindKejriwal #ChandrababuNaidu #SharadYadav
சந்திரபாபு நாயுடுவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் சந்திப்பு
Published on

புதுடெல்லி:

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைநகர் டெல்லியில் உள்ள ஆந்திரப்பிரதேசம் பவனில் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை இன்று சந்தித்தார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது லோக்தந்திரிக் ஜனதா தளம் தலைவர் ஷரத் யாதவும் உடனிருந்தார்.

இந்த சந்திப்பு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் கூறுகையில், சந்திரபாபு நாயுடுஜி மற்றும் ஷரத் யாதவ்ஜி ஆகியோருடனான சந்திப்பு நல்லவிதமாக அமைந்தது. பல்வேறு தேசிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம்  

அரசியலமைப்பை அச்சுறுத்தும் வகையில் தற்போதைய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் திரள வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என தெரிவித்துள்ளார். #ArvindKejriwal #ChandrababuNaidu #SharadYadav

X

Maalai Malar
www.maalaimalar.com