கீழ்கட்டளையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

கீழ்கட்டளையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து கொள்ளை
வீடு புகுந்து கொள்ளை
Published on

தாம்பரம்:

கீழ்க்கட்டளை, அம்பாள் நகரை சேர்ந்தவர் முகமது ஆரீப். வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

நேற்று மாலை அவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ராயப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

அப்போது வீட்டின் சாவியை வாசலில் கிடக்கும் பழைய செருப்பின் கீழ் வைத்து சென்றுவிட்டார்.

இரவு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 18 பவுன் நகையை காணவில்லை. மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

முகமது ஆரீப், வீட்டின் சாவியை மறைந்து வைத்திருப்பதை அறிந்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com