கீழடியில் அகழாய்வு பணி: கொந்தகையில் மண்குடுவை கண்டெடுப்பு

கீழடியில் அகழாய்வு பணியின் போது மண் குடுவை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது தொல்லியல் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளது.
கொந்தகையில் கண்டெடுக்கப்பட்ட மண்குடுவை.
கொந்தகையில் கண்டெடுக்கப்பட்ட மண்குடுவை.
Published on

திருப்புவனம்:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய 4 பகுதிகளில் 6-ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. இதில் பல்வேறு அரிய பொருட்கள், மனித எலும்புக்கூடுகள் கிடைத்த வண்ணம் உள்ளன. மேலும் கீழடி தொழில் நகரமாக விளங்கியதற்கான ஆதாரங்களும் கிடைத்து வருகின்றன. 

இந்தநிலையில் கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் நேற்று மண் குடுவை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது தொல்லியல் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com