கவுந்தப்பாடி அருகே பாம்பு கடித்து பெண் பலி

கவுந்தப்பாடி அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

கவுந்தப்பாடி:

கவுந்தப்பாடி அருகே உள்ள குருச்சான்வலசு காலணி பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரி (வயது 53). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மாலை 6.30 மணி அளவில் அருகே உள்ள காட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஊர்ந்து சென்ற பாம்பு மாதேஸ்வரியை கடித்தது.

இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனே மாதேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அதன்பின்னா அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com