காட்டுமன்னார் கோவில் அருகே ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்ற நர்சு மாயம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்ற நர்சு மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்டுமன்னார் கோவில் அருகே ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்ற நர்சு மாயம்
Published on

ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீரானந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகள் திவ்யா(வயது22).

இவர் நர்சிங் படித்துவிட்டு காட்டுமன்னார்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலைபார்த்து வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை.

நேற்று காலை திவ்யா வழக்கம்போல் ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த பெற்றோர் மகளை பல இடங்களில் தேடினர். எங்கும் அவரை காணவில்லை.

இதனைதொடர்ந்து காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் திவ்யாவின் தாய் சுமித்ரா புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண் திவ்யா எங்கு சென்றார் என தேடிவருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com