

ஸ்ரீநகர்:
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்றும் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மேந்தர் செக்டர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் காலை 9 மணி அளவில் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்திய ராணுவமும் இதற்கு பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் பொதுமக்களில் ஒருவர் காயம் அடைந்தார்.