கரூர் மாவட்ட மகளிர் அம்மா இரு சக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு

கரூர் மாவட்ட மகளிர் அம்மா இரு சக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட மகளிர் அம்மா இரு சக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு
Published on

கரூர்:

கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

கரூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ், கிராமப்புற மற்றும் நகர்புறத்தில் பணிக்கு செல்லும் மகளிர்களுக்கு 2018-19-ம் ஆண்டுக்கான அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற கரூர் மாவட்டத்தில் வசிப்பவராகவும், 18 முதல் 40 வயது வரை உள்ள பணிக்கு செல்லும் (அ) சுய தொழில் புரியும் இருசக்கர ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளவராகவும் இருத்தல் வேண்டும். மேலும் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரையுள்ள மகளிர் மற்றும் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். ஒரு குடும்பத்திற்கு ஒரு பயானாளி மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளி மகளிர், முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்ட மகளிர், மகளிர்களை குடும்ப தலைவராக கொண்ட மகளிர் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வருகிற 18-ந்தேதி மாலை 5 மணி வரை கரூர் மாவட்டத்திலுள்ள நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். 2017-18-ம் ஆண்டில் ஏற்கெனவே விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மீண்டும் 2018-19-ம் ஆண்டிற்கு விண்ணபிக்க தேவையில்லை. மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலகங்களை அணுகி கேட்டு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com