கரூரில் செல்போன் திருடியதாக சிறுவன் அடித்துக் கொலை

கரூர் மாவட்டத்தில் செல்போன் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் பணம் திருடியதாக சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Karur
கரூரில் செல்போன் திருடியதாக சிறுவன் அடித்துக் கொலை
Published on

கரூர்:

கரூர் மாவட்டத்தில் சிறுவன் ஒருவன் செல்போன் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியதாக மர்ம நபர்கள் அவனிடம் விசாரிக்க வீட்டுக்கு வந்துள்ளனர். வந்தவர்கள் சிறுவன் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியதில் சிறுவன் தனது வீட்டின் வாசலிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தின் போது மர்ம நபர்களின் கொடூர தாக்குதலுக்கு அஞ்சி அங்கிருந்து தப்பிச்சென்ற சிறுவனின் தாயார் இலஞ்சியம், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனை தாக்கிய நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாதாரண செல்போனை திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரத்தில் சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Karur

X

Maalai Malar
www.maalaimalar.com