குழந்தையை மீட்க போதுமான கருவி இல்லாதது அவமானம்- கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி

வின்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் நிலையில் போர் வெல்லில் விழுந்த குழந்தைகளை மீட்க போதுமான கருவிகள் இல்லாதது அவமானம் என்று கருணாஸ் எம்எல்ஏ கூறியுள்ளார்.
கருணாஸ் எம்.எல்.ஏ.
கருணாஸ் எம்.எல்.ஏ.
Published on

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருது சகோதரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபின் நடிகரும், திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருனாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் வீரத்திற்கு தலைவணங்குகிறேன். ஆழ்துளைக்குள் சிக்கி தவிக்கும் குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில் தமிழக அரசை குறை சொல்ல முடியாது.

வின்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் நிலையில் போர் வெல்லில் விழுந்த குழந்தைகளை மீட்க போதுமான கருவிகள் இல்லை என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த தேசத்திற்குமான அவமானம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com