அமெரிக்க பல்கலைக்கழக தமிழ் இருக்கை: கருணாஸ் கட்சி சார்பில் ரூ.1 லட்சம் நிதி

அமெரிக்க பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பில் ரூ. 1 லட்சத்தை இயக்கத்தின் தலைவர் கருணாஸ் வழங்கி உள்ளார்.
அமெரிக்க பல்கலைக்கழக தமிழ் இருக்கை: கருணாஸ் கட்சி சார்பில் ரூ.1 லட்சம் நிதி
Published on

சென்னை:

முக்குலத்தார் புலிப்படை இயக்க தலைவர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான இலக்கியங்களைக் கொண்ட உலகின் மிகப் பழைய மூத்த மொழி நம் செம்மொழியான தாய்மொழி தமிழ். புவிப் பந்தில் ஏறத்தாழ எட்டுக்கோடி மக்களால் பேசப்படும் இம்மொழி உலகின் 20 பெரிய மொழிகளுள் அடங்குவதோடு முதன்மையும் பெறுகிறது. தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழே அரசு மொழியாகக் கோலோச்சுகிறது.

உலகம் முழுவதும் பரவியும் புலம்பெயர்ந்தும் வாழும் 8 கோடிக்கும் அதிகமான தமிழர்களின் தாய் மொழியாகவும், தொன்மையான இலக்கிய வளமும் கொண்டு விளங்குகிறது தமிழ். இப்படிப்பட்ட தமிழ் மொழிக்கு “ஹார்வர்டில் தமிழ் இருக்கையை அமைத்தால் தமிழுக்குக் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்” என்பதை யாரும் மறுக்க முடியாது. நாமும், நமது தமிழுக்கு பங்களிப்பு செய்ய வேண்டும். தன்னால் முடிந்த நிதியை பலரும் பகிரவேண்டும்.

நான் எனது முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பில் ரூ. 1 லட்சம் வழங்குவதில் பெருமையடைகிறேன். மற்றவர்களையும் பங்களிப்பு செய்ய தூண்டுவேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com