கருணாஸ் முன்ஜாமீன் மனு 8-ந் தேதி விசாரணை

புலித்தேவர் நினைவிடத்தில் மோதல் தொடர்பாக கருணாஸை கைது செய்வதற்கு இடைக்கால தடை கேட்டு தாக்கல் செய்த மனுவை நீதிபதி 8-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். #KarunasMLA
கருணாஸ் முன்ஜாமீன் மனு 8-ந் தேதி விசாரணை
Published on

மதுரை:

நெல்லை மாவட்டம் நெற்கட்டும் செவலில் கடந்த ஆண்டு புலித்தேவர் நினைவிடத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் மரியாதை செலுத்த சென்றபோது மோதல் வெடித்தது.

இது தொடர்பாக புளியங்குடி போலீசார் கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்த வழக்கில் கருணாசை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டில் கருணாஸ் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

விசாரனை முடியும் வரை கருணாஸை கைது செய்வதற்கு இடைக்கால தடை உத்தரவு அளிக்கலாமே எனவும் என கருணாசின் வக்கீல் வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, மூன்று நாட்களுக்கு கருணாசை கைது செய்ய மாட்டார்கள் எனக்கூறி முன் ஜாமீன் மனு மீதான விசாரனையை வருகிற திங்கட்கிழமைக்கு (8-ந் தேதி) ஒத்திவைத்தார். #KarunasMLA

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com