கருணாநிதி மகள் செல்வி மீதான நில மோசடி வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கருணாநிதி மகள் செல்வி மீதான நில மோசடி வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
கருணாநிதி மகள் செல்வி மீதான நில மோசடி வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு
Published on

பூந்தமல்லி:

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த நெடுமாறன் என்பவர் கருணாநிதி மகள் செல்வி மற்றும் செல்வியின் மருமகன் ஜோதிமணி ஆகியோர் மீது கடந்த 2009-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அதில் செல்வி, அவரது மருமகன் ஜோதிமணி ஆகியோர் பனையூரில் உள்ள அவர்களது நிலத்தை என்னிடம் விற்க ஒப்பந்தம் செய்தனர். அதற்காக ரூ.4½ கோடியை முன் பணமாக கொடுத்தேன். ஆனால் நிலத்தை எனக்கு விற்காமல் வேறு நபருக்கு விற்றுவிட்டனர். நான் முன்பணமாக கொடுத்த ரூ.4½ கோடியை திருப்பி கேட்டபோது மிரட்டல் விடுத்தனர்.

அதனால் எனது பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறி இருந்தார். இவ்வழக்கு பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எண்.1-ல் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று நீதிபதி குருலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கருணாநிதி மகள் செல்வி கோர்ட்டில் ஆஜர் ஆனார்.

வழக்கை விசாரித்த நீதிபதி குருலட்சுமி வருகிற 25-ந் தேதி செல்வியை மீண்டும் ஆஜராகும்படி உத்தரவிட்டார். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com