காரியாபட்டியில் கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

கணவருடன் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பறித்துச் சென்றனர்.
காரியாபட்டியில் கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
Published on

விருதுநகர்:

மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மனைவி முத்துச்செல்வி. இவர்கள், காரியாபட்டி மருதங்குடியில் நடைபெற்ற உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர். மதுரை-காரியாபட்டி 4 வழிச்சாலையில் வந்தபோது பின்னால் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் பழனியாண்டி மோட்டார் சைக்கிள் அருகே வந்தபோது முத்துச்செல்வி கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்கச்சங்கிலியை ஒருவன் பறிக்க முயன்றான்.

ஆனால் நகையை பிடித்துக் கொண்டு முத்துச் செல்வி போராடினார். இதில் அவரது கையில் 2 பவுன் மட்டுமே சிக்கியது. 7 பவுன் நகையுடன் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

இந்த சம்பவம் காரியாபட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com