கந்திகுப்பம் அருகே கார் மெக்கானிக் தற்கொலை

கந்திகுப்பம் அருகே கார் மெக்கானிக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

பர்கூர்:

கந்திகுப்பம் அருகே உள்ள சுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாது (வயது 36). கார் மெக்கானிக். இவர் அஸ்வினி (30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவருக்கு அதிக அளவில் கடன் இருந்துள்ளது. பணம் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டதால் மனமுடைந்த மாது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com