காஞ்சிபுரம் நகராட்சியில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு இலவச பயிற்சி

காஞ்சிபுரம் நகராட்சியில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
விண்ணப்பம்
விண்ணப்பம்
Published on

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம் பெருநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை திட்டப்பணிகள், குடிநீர் வீட்டு இணைப்பு பணிகள், திடக்கழிவு மேலாண்மை, நகரமைப்புப் பணிகள் போன்றவை குறித்து இளங்கலை என்ஜினீயரிங் பட்டம் பெற்று 18 மாதங்கள், மிகாமலுள்ள பட்டதாரிகளுக்கு ஒரு ஆண்டு காலம் இலவச பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெறும் நபர்களுக்கு ஊதியமோ அல்லது உதவித் தொகையோ வழங்கப்படாது பயிற்சி முடிந்த பின் சான்று வழங்கப்படும் இந்த சான்று வேலை வாய்ப்புக்கு, நகராட்சி பணிகளில் சேருவதற்கான உத்தரவாக கருதக்கூடாது. பயிற்சியில் சேரும் இளங்கலை என்ஜினீயரிங் பட்டதாரிகள் வருகிற 7-ந் தேதிக்குள் www.internship.aicteindia.org என்ற இணைய தளத்தின் மூலம் பதிவு செய்து விவரத்தை நகராட்சிக்கு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com