காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- வாலிபர் பலி

காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அருகே உள்ள புள்ளலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மன்னன் (வயது 41), கோபி (31).

இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரத்தில் இருந்து புள்ளலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை கோபி ஓட்டினார்.

காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் புதுப்பாக்கம் ரெயில்வேகேட் அருகே சென்று கொண்டிருந்தபோது அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென கோபி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் இருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரை பற்றிய விவரம் தெரியவில்லை.

இந்த விபத்தில் கோபி, மன்னன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து காஞ்சி தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com