துப்பாக்கிச்சூடு குறித்து கவர்னர், தேசிய மனித உரிமை ஆணையத்திடம் கமல்ஹாசன் புகார்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து பொதுமக்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் கவர்னர் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகார் கடிதம் அனுப்பியுள்ளார். #SterliteProtest #Kamalhaasan
துப்பாக்கிச்சூடு குறித்து கவர்னர், தேசிய மனித உரிமை ஆணையத்திடம் கமல்ஹாசன் புகார்
Published on

சென்னை:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிடப்பட்டுள்ளதாவது, “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து மையம் விசில் செயலியில் குடிமக்களால் அளிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் இன்று புகார்க்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில் பொதுமக்கள் தெரிவித்த புகார்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. துப்பாக்கிச்சூடு குறித்து உரிய விசாரணை நடத்தவும் அதில் கோரப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com