அணைக்கரை கீழணைக்கு தண்ணீர் வந்தது- விவசாயிகள் மகிழ்ச்சி
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்கப்படுவது வழக்கம். குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை சாகுபடி குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.
கடந்த ஆண்டு போதிய தண்ணீர் இல்லாததால் மேட்டூர் அணை கடந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி திறக்கப்படவில்லை. தாமதமாக கடந்த ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி திறக்கப்பட்டது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் கடந்த 306 நாட்களாக 100 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்தது. இந்த ஆண்டு மேட்டூர் அணை கடந்த 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி 8 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தண்ணீரை திறந்து வைத்தார்.

