கள்ளக்குறிச்சி போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்

கள்ளக்குறிச்சி போலீஸ் நிலைய ஏட்டு விழுப்புரம் ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் ரங்கநாதன். இவர் பணியின்போது ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து போலீஸ் ஏட்டு ரங்கநாதனை கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் இருந்து விழுப்புரம் ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com