கலசபாக்கம் அருகே 3 கோவில்களின் பூட்டை உடைத்து திருட்டு

கலசபாக்கம் அருகே 3 கோவில்களின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

கலசபாக்கம்:

கலசபாக்கத்தை அடுத்த பில்லூர் கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலின் பூட்டை உடைத்து சாமி சிலையில் இருந்த தங்க மாங்கல்யத்தை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர். மேலும் அதே பகுதியில் உள்ள ஜெயின் கோவிலின் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.5ஆயிரத்தை திருடி சென்று விட்டனர். இதேபோல் கலசபாக்கம் திரவுபதி அம்மன் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த சாமி சிலையின் மாங்கல்யத்தையும் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com