காடையாம்பட்டி பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

காடையாம்பட்டி பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
காடையாம்பட்டி பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
Published on

காடையாம்பட்டி:

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த பண்ணபட்டி ஊராட்சி காங்கியானூரில் சுமார் 500 குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த 3 மாத காலமாக சரியான முறையில் குடிநீர் வழங்காமல் குடிநீர் தட்டுபாடு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 15 நாட்களுக்கு முன் காடையாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக குடிநீர் வசதி அமைத்து தரும்படியும், நாள் ஒன்றுக்கு டிராக்டர் மூலம் குடிநீர் வழங்குவதாக கூறபட்ட நிலையில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஆனால் அன்று முதல் இன்று வரை எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தின்னபட்டி-பண்ணபட்டி செல்லும் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் அறிந்த தீவட்டிபட்டி போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com