

பிரிமீயர் லீக்கில் முன்னணி கால்பந்து அணியாக திகழ்ந்து வருவது லிவர்பூல். இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஜூர்கன் க்ளோப் இருந்து வருகிறார். 2019 யூரோப்பியன் சாம்பியன் லீக் கோப்பையை லிவர்பூல் அணி இவரது தலைமையில் கைப்பற்றியது. அதற்கு முந்தைய சீசனில் 2-வது இடம் பிடித்திருந்தது.
2015-ல் இருந்து லிவர்பூல் அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார். தற்போதைய பிரிமீயர் லீக்கில் 8 புள்ளிகள் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் அவரது பதவிக்காலம் 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.