லிவர்பூல் தலைமை பயிற்சியாளராக 2024 வரை பணியாற்ற க்ளோப் சம்மதம்

பிரிமீயர் லீக் கால்பந்தின் முன்னணி அணியான லிவர்பூல் ஜூர்கன் க்ளோப்பின் பதவிக்காலத்தை 2024 வரை நீட்டித்துள்ளது.
ஜூர்கன் க்ளோப்
ஜூர்கன் க்ளோப்
Published on

பிரிமீயர் லீக்கில் முன்னணி கால்பந்து அணியாக திகழ்ந்து வருவது லிவர்பூல். இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஜூர்கன் க்ளோப் இருந்து வருகிறார். 2019 யூரோப்பியன் சாம்பியன் லீக் கோப்பையை லிவர்பூல் அணி இவரது தலைமையில் கைப்பற்றியது. அதற்கு முந்தைய சீசனில் 2-வது இடம் பிடித்திருந்தது.

2015-ல் இருந்து லிவர்பூல் அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார். தற்போதைய பிரிமீயர் லீக்கில் 8 புள்ளிகள் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் அவரது பதவிக்காலம் 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com